மேர்வின் சில்வாவின் அமைச்சு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இருவர் கைது
Monday, November 17, 20140 comments
அமைச்சர் மேர்வின் சில்வாவின் பாதுகாப்பு பிரிவு (MSD - அமைச்சு பாதுகாப்பு பிரிவு) அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் மாலக்க சில்வாவிற்கும் வெளிநாட்டு ஜோடிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மாலக்க சில்வா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மாலை மாலக்க சில்வாவின் நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment