கையடக்கத் தொலைபேசி மூலம் அபராதம் செலுத்தலாம்

Sunday, November 16, 20140 comments


மோட்டார் வாகனங்கள் தொடர்பான தவறுகளுக்கு விதிக்கப்படும் அபராதங்களை செலுத்த, கையடக்கத் தொலைபேசி மற்றும் கிரடிட் காட்களை பயன்படுத்தும் முறையொன்றை அறிமுகப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இதன் முதல் கட்டமாக கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக அபராதம் செலுத்தும் முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

இவ்வருட இறுதியில் இதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்த ஒரு கையடக்கத் தொலைபேசி இலக்கத்தில் இருந்தும் இவ்வாறு அபராதத் தொகையை செலுத்துவற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

மோட்டார் வாகனங்கள் தொடர்பான தவறுகளுக்காக அபராதம் செலுத்துவது தொடர்பில் எதிர்நோக்கிவரும் சிரமங்களை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham