ஜனாதிபதி தேர்தல்: நாட்டின் நல­னுக்கமைய தீர்மானம் எடுப்போம்-பீ.எம்.ஜே.டி

Sunday, November 16, 20140 comments


நாட்டின் நலனையும், பொது மக்களது அபிலாஷைகளையும் மையமாக வைத்து நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு (பீ.எம்.ஜே.டி) நல்லதொரு தீர்மானத்திற்கு வரும் என அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் இர்பான் காதர் தெரிவித்தார்.

அவருடனான நேர்காணல் வருமாறு,

கேள்வி: ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பி­லான நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான மக்­கள் ­அ­மைப்பின் தீர்­மானம் என்ன? 

இன்னும் உறு­தி­யான தீர்­மா­னத்­திற்கு வர­வில்லை. ஜனா­தி­பதித் தேர்தல் குறித்து தேசிய ரீதி­யா­க­வுள்ள கட்­சிகள் மேற்­கொண்டு வரு­கின்ற காய்­ந­கர்த்­தல்கள், உள்ளூர் பொது­மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை ஆராய்ந்து வரு­கின்றோம். நாட்டின் நல­னையும், பொது மக்­க­ளது அபி­லா­ஷை­க­ளையும் மைய­மாக வைத்து நல்­ல­தொரு தீர்­மா­னத்­திற்கு வருவோம்.

குறிப்­பாக, எங்­க­ளது அமைப்பின் கொள்­கைகள், செயற்­பா­டு­க­ளுடன் ஒத்­து­வ­ரு­கின்ற பல அமைப்­புக்கள் இலங்­கையில் செயல்­பட்டு வரு­கின்­றன. அவற்­றுடன் கலந்­து­ரை­யாடி, நாட்டின் தேசிய நலன், சமூ­கங்­க­ளி­டை­யி­லான ஒற்றுமை போன்­ற­வற்றை கருத்தில் கொண்டு, நல்­ல­தொரு நிலைப்­பாட்டை முன்­வைப்­ப­தற்கு சிறந்­த­தொரு சந்­தர்ப்­ப­மா­கவும் நாங்கள் இந்த ஜனா­தி­பதித் தேர்­தலைப் பார்க்­கின்றோம்.

கேள்வி: நீங்கள் ஆத­ரிக்­கப்­போகும் வேட்­பா­ள­ரி­டத்தில் எதிர்ப்­பார்ப்­பது?

இன மத வேறு­பா­டு­க­ளுக்கு அப்பால் இருந்து, நாட்டின் நலனை மையப்­ப­டுத்தி இந்தத் தேர்­தலை எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. குறிப்­பாக, நிறை­வேற்று ஜனா­தி­பதி முறையை இல்­லா­தொ­ழித்தல், ஊழல் மோச­டி­களை இல்­லா­தொ­ழித்து, சுபீட்­ச­மான இலங்­கையைக் கட்­டி­யெ­ழுப்­புதல், சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக நடை­பெற்று வரு­கின்ற இன­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்தல், சக­வாழ்­வுக்கும், இந்­நாட்டில் வாழ்­கின்ற சகல இன­மக்­க­ளதும் அபி­லா­ஷை­க­ளுக்கும் முக்­கி­யத்­து­வ­ம­ளித்தல் போன்ற பொது­வான பல விட­யங்­களில் கவனம் செலுத்­தப்­படும்.

கேள்வி: ஜனா­தி­பதி தேர்­தலில் உங்கள் இயக்கம் பங்­கு­கொள்­கின்­ற­மைக்­கான காரணம் என்ன?

எமது பிராந்­திய மக்கள் மிக நீண்­ட­கா­ல­மாக அர­சியல் ரீதி­யாக பின்­தள்­ளப்­பட்­டுள்­ளனர். சந்­தர்ப்­ப­வாத அர­சி­யல்­வா­திகள் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொண்டு, ஆச­னங்­களில் அமர்ந்து கொள்­வ­தற்­கா­கத்­தான் எமது மக்­களைப் பயன்­ப­டுத்­து­கின்­றார்கள். இந்­நிலை மாற்­ற­ம­டைய வேண்டும். மத்­திய பிராந்­தி­யத்தில் அர­சியல் விழிப்­பு­ணர்­வையும், வழி­காட்­ட­லையும் வழங்க வேண்டும் என்ற நோக்­கில்தான் எமது அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. எனவே, இந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஒரு தீர்மானம் மேற்கொள்ள வேண்டியதொரு பொறுப்பு எமக்கிருக்கின்றது.

அத்துடன், இந்தத் தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகளினதும் தீர்மானங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகவே இருக்கும் என்பது நிச்சயம்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham