அரசின் இயலாமையால் அம்பாறை காணி பிரச்சினையை தீர்க்கமுடியாதுள்ளது - முஜிபுர் ரஹ்மான்

Thursday, November 13, 20140 comments


அம்­பாறை மாவட்ட பாரா­ளுமன் உறுப்­பி­னர்கள் அனைவரும் ஆளும்­த­ரப்பில் இருக்­கின்­றனர். ஆனால் அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்லிங்களுக்கு மக்­க­ளுக்கு காணி தொடர்பில் பல பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. அவற்­றிற்கு தீர்­வை­பெற்­று­கொ­டுக்க அவர்­களால் முடி­யா­துள்­ள­தாக மேல்­மா­காண சபை உறுப்­பினர் முஜிபுர் ரஹமான் தெரி­வித்தார்.

அரசில் இணைந்­து­கொள்­வ­தன் ­மூலம் மக்­க­ளுக்கு பெரும் சேவை­யாற்ற முடியும் என கூறிக்­கொள்ளும் அர­சியல் தலை­மை­களால் எத­னையும் சாதிக்கா முடி­யா­துள்­ள­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.

அண்­மையில் கிழக்கு மாகா­ணத்­திற்கு விஜ­யமொன்றினை மேற்­கொண்ட ஐக்­கிய தேசிய கட்­சியின் குழு­வி­டம் அம்­பாறை மாவட்ட மக்கள் முன்­வைத்த குற்­றச்­சாட்­டுகள் தெடர்­பிலும் அதற்­காண நட­வ­டிக்­கைகள் தொடர்பில் குறிப்­பி­டு­கை­யி­லுமே அவர் மேற்­காண்­ட­வாறு தெரி­வித்­த­துள்ளார்.

அம்­பாறை மாவட்­டத்­தி­லேயே அதி­க­மான முஸ்­லிம்கள் வாழ்­கின்­றனர். அங்கு பெரு­ம­ள­வி­லான மக்கள் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. இவை தொடர்பில் மக்கள் எம்­மிடம் முறை­யிட்­டுள்­ளனர்.

குறிப்­பாக அம்­மா­வட்டம் முழு­வ­து­மாக மக்­க­ளுக்கு காணி தொடர்­பி­லான பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. கொழும்பு நகரில் அபி­வி­ருத்­தியை காரணம் காட்டி மக்­களின் காணிகள் சூறை­யா­டப்­ப­டு­வ­துபோல் அம்­பா­றையில் தொல்­பொருள் ஆய்­வுகள் மற்றும் அரச காணிகள், சட்­ட­வி­ரோத குடி­யேற்றம் என குறிப்­பிட்டு மக்­களின் காணிகள் ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­கின்­றன. அங்­குள்ள அர­சியல் தலை­மைகள் அத்­த­னை­பேரும் அர­சுடன் இருந்த போதிலும் இதற்கு தீர்வை பெற முடி­ய­வில்லை.

அக்­க­றைப்­பற்றில் வட்­ட­மடு பகு­தி­யில்­லுள்ள மக்­களின் 500 ஏக்கர் வரை­யி­லான மேய்ச்சல் நிலம் அப­க­ரிக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இத­னி­டையே பொத்­துவில் நகரில் முஸ்­லிம்கள் வாழும் பகு­தியில் பகு­தியில் பௌத்த விகாரை அமைப்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­மையால் மக்கள் பெரும் அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கின்­றனர்.அத்­தோடு பொத்­துவில் கரங்­கோ­வா­வட்­டையில் மக்­களின் காணியில் யானை தொல்லை இருப்­ப­தாக காரணம் காட்டி அங்கு காணி அப­க­ரிப்பு இடம்­பெ­ரு­கின்­றது. அஷ்ரப் நகரில் முஸ்­லிம்­களின் காணி இரா­ணு­வத்­தி­னரால் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னி­டையே சம்­மாந்­துறை கரங்­கோ­வா­வட்டை பகு­தி­யிலும் மக்­களின் காணியில் யானை தெல்­லையை காரணம் காட்டி ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

ஒலுவில் துறை­முக அபி­வி­ருத்­திக்­காக மக்­க­ளி­ட­மி­ருந்து சுவீ­க­ரிக்­கப்­பட்ட கணி­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கும்­போது சிலர் ஆவணங்கள் இன்­மையால் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளுக்கு மனி­த­நேய அடிப்­ப­டையில் நீதி வழங்­கப்­ப­டா­துள்­ளது. அத்­தோடு சவூதி அர­சாங்­கத்­தினால் கட்­டிக்­கொ­டுக்­கப்­பட்ட சுனா­மி­வீட்­டுத்­திட்­டமும் இன்­று­வ­ரைக்கும் மக்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­ப­டா­தி­ருக்­கின்­றது. இவ்­வாறு மக்களின் காணி மற்றும் இருப்பிடம் தெடர்பிலான பிரச்சனை நீண்டுகொண்டே செல்கின்றன. இதற்கு அங்குள்ள அரசியல்

வாதிகளால் தீர்வைபெற்றுக்கொடுக்க முடியாமையினால் மக்கள் எம்மிடம் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றனர். எனவே இது தொடர்பில் நாம் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளோம் என்றார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham