தமிழ், முஸ்லிம் வாக்குகளே அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் சோபித தேரர்

Friday, October 3, 20140 comments


இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் - முஸ்லிம் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாக அமையும். ஆகவே, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் பிரதான கட்சிகளையும் முஸ்லிம் தலைவர்களின் ஆதரவுகளை பெற்றுக்கொள்ளவும் நாம் முயற்சிக்க வேண்டும் என மூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் கோட்டை நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் பயணித்தால் மட்டுமே ஆட்சி மாற்றத்தினை தீர்மானிக்க முடியும். எனவே, அதனை கருத்திற்கொண்டுதான் சகல தரப்பினரையும் ஒரு கொள்கையின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுப்பேன். காலம் கடத்துவது நாட்டைதவறான பாதைக்கு கொண்டு சென்று விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham