மு.கா. இம்முறை அரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்யாது: விமல்
Monday, October 20, 20140 comments
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது செய்த தவறை அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது செய்யாது என்று தான் நம்புவதாக தேசிய வீடமைப்பு மற்றும் பொறியியல் நிர்மாண அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
2005, 2010ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது எமது கட்சி ஆதரவளித்தது போல யுத்த வெற்றி மற்றும் அபிவிருத்திக்காக் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்.
பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் வட-கிழக்கு அரசியல் மற்றும் தேர்தல்களின்போது எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயல்படுதவதற்கு பேச்சுவார்த்தை நடாத்தி ஒப்பந்தமொன்றைச் கைச்ச்சாத்திட உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றதே என்று ஊடவியலாளர் வினவியதற்கு அவர் பதிலளிக்கையில்,
கடந்த இரண்டு ஜனாபதித் தேர்தலிலும் தோல்விபெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களுக்கே முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையும் ஒன்று சேர்ந்து ஆதரவளித்தது.
அதன் பின் அந்த தவறை மீள செய்யமாட்டோம் என சொல்லித்தான் ஜனாதிபதி மஹிந்தவிடம் வந்து சேர்ந்து அமைச்சுகளையும் பொறுபேற்றனர்.
மீண்டும் இந்த வரலாற்றுத் தவறை இழைக்க மாட்டார்கள் என நம்புகின்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து முஸ்லிம்களை மீளவும் பலிக்காடாக்களாக்கி தோல்விபெறும் ஜனாதிபதி வேட்பாளாருக்கு உதவுவார். என்ற நிலைப்பாட்டுக்கு ரவூப் ஹக்கீமை போகமாட்டார் என நினைக்கின்றேன்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இவ்வாறு செய்வார்கள் என ஏற்கெனவே பல தடவைகள் அரசுக்கு சொல்லி வந்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment