பொதுபலசேனாவின் யோசனைகளை ஐ.தே.க. பரிசீலிக்காது - கபீர் ஹாஸிம்

Friday, October 17, 20140 comments


பொது­ப­ல­சே­னாவின் சங்க சம்­மே­ளன மாநாட்­டின்­போது எடுக்­கப்­பட்ட தீர்­ம­னங்கள் அடங்­கிய யோச­னையை ஐக்­கி­ய­தே­சியக் கட்சி ஒரு­போதும் பரி­சீ­ல­னைக்கு எடுக்­கப்­போ­வ­தில்லை என கேகாலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐ.தே.க.வின் தவி­சா­ள­ரு­மான கபீர் ஹாஸிம் தெரி­வித்தார்.

ஐ.தே.க. செய­லாளர் கடந்­த­வாரம் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்­றின்­போது பொது­ப­ல­சே­னாவின் யோச­னை­களை தாம் பரி­சீ­லிக்­க­வி­ருப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்தார். இந்த கருத்­துகள் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இந்­நி­லையில் இது தொடர்பில் நாம் ஐ.தே.க. செயற்­குழு உறுப்­பி­னர் கபீர் ஹாஸி­மிடம் வின­வினோம். இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், ஐக்­கிய தேசிய கட்சி ஒரு போதும் இன­வா­தத்தை கையில் எடுக்­காது. ஏனெனில் அக்­கட்சி இன ஐக்­கி­யத்­தினால் உரு­வாக்­கப்­பட்ட கட்­சி­யாகும். இதனை தொடர்ந்தும் நாம் பேணி வரு­கின்றோம். இன ஐக்­கி­யத்தை சீர்­கு­லைக்க தலை­மைத்­துவம் ஒரு­போதும் இட­ம­ளிக்­காது. இது இவ்­வா­றி­ருக்க பொது பல சேனா அமைப்பு பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யி­ருக்கும் யோச­னை­களை ஐ.தே.க. பரி­சீ­லிக்­க­வி­ருப்­ப­தாக எமது கட்­சியின் செய­லாளர் திஸ்ஸ அத்­த­நா­யக்க குறிப்­பிட்­டதை செய்­திக்­கு­றிப்­பு­களில் பார்த்தோம். இத­னை­ய­டுத்து பலரும் என்னை தொடர்­பு­கொண்டு இது­பற்றி கேட்­டனர்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் நான் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ரம சிங்­க­விடம் கேள்­வி­யெ­ழுப்­பினேன். இதன்­போது 'பொது பல சேனா­வுடன் எந்­த­வொரு பேச்­சுக்கும் இடம் கிடை­யாது. அவ்­வாறு அவர்­களின் யோச­னை­களை பரி­சீ­லிப்­ப­தா­க­வி­ருந்தால் கட்­சியின் செயற்­கு­ழுவில் ஆரா­யப்­பட்­டி­ருக்­க­வேண்டும். எனினும் அவ்­வாறு எந்த விட­யமும் ஆரா­யப்­ப­ட­வில்­லையே' என்று அவர் பதி­ல­ளித்தார்.

தலை­மையை தாண்டி கட்­சிக்குள் பொது­ப­ல­சே­னாவின் யோச­னை­களை கொண்­டு­வர முடி­யாது. ஒன்றை நாம் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யி­ருக்­கி­றது. பொது­ப­ல­சே­னா­வினர் எமது தலைமை­ய­க­மான ஸ்ரீ கொத்­தா­வுக்குள் நுழைய முற்­பட்­ட­போது அவர்­களை நாம் அடித்து துரத்­தி­யி­ருக்­கிறோம். அவர்­க­ளுக்கு எங்கள் கட்­சி­யிடம் எவ்­வி­த­மான வர­வேற்பும் கிடை­யாது.
திஸ்­ஸவின் கருத்து ஒரு­வேளை அவரின் தனிப்­பட்ட கருத்­தாக இருக்­க­லாமே தவிர கட்­சியின் நிலைப்­பா­டாக கருத முடி­யாது என்றார்.

இத­னி­டையே இவ்­வி­வ­காரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் செய­லாளர் விமர்­ச­ன­மொன்றை வெளி­யிட்­டி­ருந்தார்.

அதில், பொது­பல சேனா­வுடன் அர­சாங்­கத்­திற்கு தொடர்பு இருப்­ப­தாக உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற செய்­திகள் வெளியி­டப்­பட்டு வரு­கின்ற நிலையில் ஐக்­கிய தேசிய கட்சி அவ்­வ­மைப்­புடன் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இணைய முயற்­சிப்­ப­தாக குற்றம் சுமத்தியிருந்தார்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham