பெறு­ம­தி­மிக்க இரத்­தின கற்­களை உரி­மை­யா­ள­ரிடம் ஒப்­ப­டைத்த மாணவனுக்கு1 1/2 இலட்சம் ரூபா அன்பளிப்பு

Friday, September 12, 20140 comments



காணாமல் போன சுமார் 40 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரத்­தினக் கற்­களை தேநீர் கடை­யொன்­றி­லி­ருந்து கண்­டெ­டுத்து அதன் உரி­மை­யா­ள­ரிடம் ஒப்­ப­டைத்த சம்­ப­வ­மொன்று கடந்த 6 ஆம் திகதி சனிக்­கி­ழமை மாலை பேரு­வளை சீனன் கோட்டை பத்தை இரத்­தினக் கல் வர்த்­தக சந்­தையில் இடம்­பெற்­றது.

காலி அலோ­சியஸ் கல்­லூ­ரியில் கல்வி கற்று க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்­சைக்கு தோற்றி பின்னர் இரத்­தினக் கல் வியா­பாரம் தொடர்­பாக பயிற்சி பெற்றுவரும் காலி கிந்­தொட்டை குருத்­து­வத்தை என்ற பகு­தியைச் சேர்ந்த முஹம்மத் ஹாசிம் ஜிப்ரி முஹம்மத் நிஜாத் என்ற மாண­வனே தனது தந்­தை­யுடன் வந்து இந்த கற்­களை உரி­ய­வ­ரிடம் ஒப்­ப­டைத்தார்.

இதன் உரி­மை­யாளர் எஹ­லிய கொடையைச் சேர்ந்த முஹம்மத் றியாழ் என்­ப­வ­ராவார். 11 பொதிகளை கொண்ட இந்த இரத்­தினக் கற்கள் சூடேற்­று­வ­தற்­காக பல­ரி­ட­மி­ருந்து பெற்றுக் கொள்­ளப்­பட்­ட­வை­க­ளாகும். சூடேற்­றிய பின் நல்ல நிலைக்கு வந்தால் இக் கற்கள் பல கோடி ரூபா பெறு­மதி மிக்­க­வை­க­ளாக மாறலாம் என இரத்­தினக் கல் வர்த்­த­கர்கள் இங்கு தெரி­வித்­தனர்.

இரத்தின கற்­களை ஒப்­ப­டைத்த மாண­வ­னுக்கு உரி­மை­யாளர் றியாழ் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை இதன் போது அன்பளிப்பாக வழங்­கினார்.
11 பார்­சல்கள் கொண்ட இரத்­தினக் கற்கள் கடந்த வாரம் (3/9/14) புதன்­கி­ழமை பத்தை இரத்­தினக் கல் வர்த்­தக சந்தை பகு­தியில் காணாமல் போயுள்­ளது அன்­றைய தினம் தனது தந்தை மற்றும் நண்­பர்­க­ளுடன் சந்­தைக்கு வர்த்­தக நட­வ­டிக்­கைக்­காக வந்­துள்ள இந்த மாணவன் தேநீர் அருந்­து­வ­தற்கு கடை­யொன்­றுக்குச் சென்ற போது இதைக் கண்­டெ­டுத்து வீட்­டுக்குச் சென்று தந்­தை­யிடம் உரி­மை­யா­ளரைத் தேடி ஒப்­ப­டைக்­கும்­படி கூறி­யுள்ளார். பின்னர் தந்தை தனது மக­னுடன் வந்து சீனன் கோட்டை இரத்­தினக் கல் வர்த்­தகர் ஸினான் உஸ்மான் ஹாஜி­யா­ரிடம் கற்­களின் உரி­மை­யா­ளரை தேடி அறி­விக்­கு­மாறு கேட்­டுள்ளார்.

இத­னை­ய­டுத்து உரி­மை­யா­ளரை தேடி கற்கள் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன. இந்த மாண­வனின் முன்­மா­தி­ரியை இங்கு வர்த்­தக நட­வ­டிக்­கையில் ஈடு­படும் உள்­நாட்டு வெளி­நாட்டு இரத்­தினக் கல் வர்த்­த­கர்கள் பெரிதும் பாராட்­டினர்.

இரத்­தினக் கல் வர்த்­தகம் தொடர்­பாக பயிற்சி பெறும் இந்த மாண­வ­னுக்கு சிறந்ததொரு எதிர்காலமுண்டு என்றும் இங்குள்ள வர்த்தகர்கள் சுட்டிக் காட்டினர். பேருவளை நகர சபை முன்னாள் உறுப்பினர் தஸ்லீம் சாபி ஸினான் உஸ்மான் உட்பட பலரும் இதன் போது பங்குபற்றினர்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham