புல்மோட்டையும் புனித பூமியா?

Friday, August 29, 20140 comments



எஸ்.என்.எம்.ஸுஹைல்

நாடு­மு­ழு­வதும் பல  பிர­தே­சங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான காணிகள் தொடர்ந்தும் அப­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அபி­வி­ருத்தி, இரா­ணுவ முகாம் அமைத்தல், புனித பூமி எனவும் கூறியே அப்­பாவி மக்­களின் காணிகள் சூறை­யா­டப்­ப­டு­கின்­றன.

கிழக்கு மாகா­ணத்தில் பர­வ­லாக விவ­சாய காணி­களும் குடி­யி­ருப்பு காணி­களும் சுவீ­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் புல்­மோட்டை, கரு­ம­லை­யூற்று, தோப்பூர் என பல பகு­தி­களில் முஸ்­லிம்­களின்  காணி­களை அப­க­ரிக்க பல போராட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இந்­நி­லையில் புல்­மோட்டை முதலாம் கிராம சேவகர் பிரி­விற்கு உட்­பட்ட அரிசி மலைக்­குடா என அழைக்­கப்­படும்  பொன்­­ம­லைக்­குடா கிரா­மத்தில் 500 ஏக்கர் நிலப்­ப­குதி புனித பூமி என்ற பெயரில் அப­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.

அரி­சி­மலை என அழைக்­கப்­படும் பொன்­ம­லைக்­குடா 99 % முஸ்லிம் மக்கள் வாழும் பகு­தி­யாகும். தம்­பட்டை பகு­தி­யி­லி­ருந்து 1811 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யி­லி­ருந்த மக்கள் இப்­ப­கு­தியில் குடி­யேறி தமது வாழ்­வி­டத்தை அமைத்­துக்­கொண்­டனர். அப்­ப­கு­தி­யி­லேயே விவ­சா­யமும் கடற்­றொ­ழிலும் செய்து தமது வாழ்­வா­தா­ரத்தை மேற்­கொண்டு வந்­தனர். யுத்த காலத்தில் மக்கள் அப்­ப­கு­தியில் இருந்த போதிலும் உக்­கிர மோதல்­களின் போது பாது­காப்­புக்கு சவால் ஏற்­பட்­டது. இதனால் பலர் அங்­கி­ருந்து அக­தி­க­ளாக வெளி­யே­றினர். இந்­நி­லையில் தற்­போது அங்கு சுமார் 35 கு­டும்­பங்கள் வசித்து வந்­தாலும் குறித்த பகு­தியில் 134 குடும்­பங்­க­ளுக்­கு­ரிய காணி உறு­திப்­பத்­தி­ரங்கள் இருக்­கின்­றன. பலர் வெளிபிர­தே­சங்­களில் இடம்­பெ­யர்ந்து வசிக்­கின்­றனர்.

1994,1998,2002 போன்ற வரு­டங்­களில்  உறு­திப்­பத்­தி­ரங்கள் பகி­ரப்­பட்­டி­ருக்­கின்­றன. 2002 ஆம் ஆண்­டுக்கு பின்னர் உறு­திப்­பத்­தி­ரங்­களை பெறு­வ­தற்­காக சுமார் 9000 பேர் ­புல்­மோட்டை பிர­தேச செய­ல­கத்­திற்கு விண்­ணப்­பித்­துள்­ளனர். இருப்பினும் அவர்­க­ளுக்கு உறு­திப்பத்திரங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் குறித்த அரி­சி­மலை பகுதி புனித பூமி­யாக பிர­க­ட­ணப்­ப­டுத்தி 500 ஏக்கர் காணி அப­க­ரிக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. எனினும் மக்கள் தமது இருப்­பிற்­காக தொடர்ந்தும் போராடி வரு­கின்­றனர்.
காணியை அளப்­ப­தற்­காக நில அளவை திணைக்­க­ளத்­தினர் ஐந்து தடவை வந்து போயுள்­ளனர். ஆனால் மக்கள் அதற்கு இடம் கொடுப்­ப­தாக இல்லை. தொட­ராக இது­வரை 5 முறை அவர்கள் களத்­திற்கு வந்து போய் விட்டனர். நேற்று முன்­தினம் செவ்வாய்க் கிழமை ஐந்­தா­வது முறை­யாக வந்த போது மக்கள் பெரும் எதிர்ப்பை தெரி­வித்­தனர். பிர­தே­சத்தில் ஹர்த்தால் நடத்­தப்­பட்­டது. அத்­தோடு புல்­மோட்டை திரு­கோ­ண­மலை சந்­தியில் மக்கள் குழு­மி­யி­ருந்து எதிர்ப்பு ஆர்ப்­பாட்­ட­மொன்­றையும் நடத்­தினர்.

மக்கள் குறித்த பகு­தியில் ஆர்ப்­பாட்டம் நடத்­திக்­கொண்­டி­ருக்கும் போது காட்­டுப்­ப­கு­தி ஊடாக அதி­கா­ரிகள் உட்­பு­குந்து காணி அளக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர். அரி­சி­ம­லையை அண்­மித்த பொன்­ம­லைக்­குடா, வீரந்­தீவு மற்றும் தேத்­தா­வடி தீவு ஆகிய கிரா­மங்­களை ஊட­றுக்கும் வகை­யி­லேயே இந்த நில அளவை மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருந்­தது. ஆர்ப்­பாட்டம் இடம்­பெற்ற இடத்­துக்கு புல்­மோட்டை  பொலிஸார் மாத்­தி­ர­மின்றி குச்­ச­வெளி, நிலா­வெளி, திரு­கோ­ண­மலை, ஸ்ரீபுரம் ஆகிய பொலிஸ் நிலை­யங்­களில் இருந்தும் பொலிஸார் வர­வ­ழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுத்­த­தோடு குறித்த பகு­தியில் பதற்ற நிலை ஏற்­பட்­டது.  இதனால் கல­வரம் அடக்கும் பொலிஸார் ஸ்தலத்­திற்கு அழைக்­கப்­பட்­டனர்.

பதற்ற சூழ்­நி­லை­யின்­போது அபூ­பக்கர்  என்­பவர் காய­ம­டைந்­த­நி­லையில் புல்­மோட்டை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

சம்­பவ இடத்­துக்கு திரு­கோ­ண­மலை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், குச்சவெளி பிரதேச சபை தலைவர் எ.பீ.முபாறக், உபதலைவர் எ.ஆதம் பாபா தௌபீக், திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபர் எஸ். அருள்ராசா, கிண்ணியா நகரசபை தலைவர் ஆர்.எம்.ஹில்மி, குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் எம். ஹாசிக், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்  எம்.புஸ்பகாந்தன்,   குச்சவெளி பிரதேச சபை செயலாளர்  கிருஷ்நேந்திரன் ஆகியோர் வருகை தந்தனர்.
திரு­கோணமலை மாவட்­டத்தில் தற்­போது அதி­கார தரப்­பி­னரின் கெடு­பி­டிகள் அதி­க­ரித்து விட்­டன. அப்­பா­வி­மக்கள் தங்­க­ளது வீடு, தொழில், காணி, வணக்­கஸ்­தலம் , வர­லாற்று அடை­யா­ளங்­களை இழக்க நேரி­டு­கி­றது.

தமக்கு இழைக்­கப்­படும் அநீ­தி­களின் போது மக்கள் போராட்­டங்­களில் ஈடு­ப­டு­வ­தற்கு பழ­கிப்­போய்­விட்­டனர். இதன்­போது பிர­தேச அர­சியல் பிர­மு­கர்கள் ஒரு விசிட் அடிப்­பார்கள். அங்கு ஆக்­ரோ­ச­மான உரை­யொன்றும் ஆற்­று­வார்கள். சொல்லும் பாணி­யையும் வேகத்­தையும் பார்த்தால் ஆர்­பாட்டம் கலையும் கோரிக்கை நிறை­வேறும் போல் இருக்கும். அங்­குள்ள மக்­களின் நிலை 'இலவு காத்த கிளி'க்கு ஒப்பானதே. காரியம் ஒருகாலமும் நிறைவேறுவதாகவே இல்லை.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham