அளுத்கம தாக்­குதல் நடத்தியோர் தேசத் துரோ­கிகள் என்­கிறார் ரணில்

Monday, June 30, 20140 comments



அளுத்­க­மவில் மேற்­கொள்­ளப்­பட்­டமை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­குதல் மட்­டு­மல்ல முழு இலங்­கைக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட நாச­கா­ர­வே­லை­யாகும். இதனை மேற்­கொண்­ட­வர்கள் தேசத்­து­ரோ­கி­க­ளாவர்  என்று எதிர்­கட்­சித்­த­லை­வரும் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க குற்றம் சுமத்­தினார்.

இது­வரை ஐக்­கிய நாடுகள் சபை இந்த அர­சாங்­கத்­துக்கு எதி­ரா­கவே செயற்­பட்­டுக்­கொண்­டி­ருந்­தது. எனினும் அளுத்­கம விவ­கா­ரத்­தினால் இலங்கை நாட்­டுக்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தோடு சிங்­க­ள­வர்­களை சர்­வ­தேசம் மிலேச்­சத்­த­ன­மா­ன­வர்கள் என பார்க்கும் நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்­தார்.
அளுத்­கம, பேரு­வளை, தர்கா நகர் உள்­ளிட்ட பிர­தே­சங்­க­ளுக்கு நேற்று மாலை விஜ­ய­மொன்றை மேற்­கொண்ட எதிக்கட்சித் தலைவர்,  வன்­மு­றை­களால் பாதிக்­கப்­பட்ட மக்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குற்றம் சுமத்­தினார்.



கடும்­போக்­கா­ளர்­களின் செயற்­பா­டுகள் கார­ண­மாக அச்­ச­ம­டைந்­துள்ள முஸ்­லிம்­க­ளுக்கு இம்­முறை நிம்­ம­தி­யான முறையில் நோன்பை நோற்க முடி­யா­துள்­ளது. எனவே, இம்­முறை முஸ்­லிம்­க­ளுக்கு ரமழான் இல்லை எனவும் அவர் தெரி­வித்தார். தர்கா நகர், அதி­கா­ரி­கொட பள்­ளி­வா­சலில் மக்­களை சந்­தித்து எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ரம சிங்க கலந்­து­ரை­யா­டினார்.
இதன்­போ­து­ பா­ரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கபீர் ஹாஸிம், எம்.எச்.ஏ.ஹலீம், திஸ்ஸ அத்தநாயக்க, ஆர். யோகராஜன், அஜித் பி. பெரேரா மற்றும் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான  முஜிபுர் ரஹ்மான், இப்­திகார் ஜெமீல், பைரூஸ் ஹாஜியார், எஸ்எம். மரிகார் உட்பட பலரும் கலந்­து­கொண்­டனர்.


இங்கு மக்கள் எதிர்­கட்சித் தலை­வ­ரிடம் கடும்­போக்­கா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­கள்­பற்றி விப­ரித்­தனர்.

இத­னை­ய­டுத்து மக்கள் மத்­தியில் ரணில் விக்­கி­ரம சிங்க தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

கடந்த 15 ஆம்­தி­கதி  அளுத்­கம, தர்கா நகர், பேரு­வளை, துந்­துவ, வெலிப்­பனை உள்­ளிட்ட பகு­தி­களில் கடும்­போக்­கு­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லா­னது முஸ்­லிம்­க­ளுக்கும் இப்­பி­ர­தே­சத்­திற்கும் மட்டும் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் அல்ல, இலங்கை மீதே மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லாகும். இத்­தாக்­கு­த­லுக்கு கார­ண­மா­ன­வர்­களும், வன்­மு­றையில் ஈடு­பட்­டோரும் தேசத்­து­ரோ­கி­க­ளே­யாவர்.

இது­வரை காலமும் ஐ.நா.வும் சர்­வ­தே­சமும் இலங்கை அர­சுக்கு எதி­ரா­கவே செயற்­பட்­டன. இந்த அசம்­பா­வி­தங்கள் கார­ண­மாக இலங்­கையில் நேர­டி­யாக சர்­வ­தேசம் தலை­யிட்டு செயற்­படும் சூழ்­நி­லையை அர­சாங்கம் தோற்­று­வித்­துள்­ளது.

கடும்­போக்­கா­ளர்­களின் செயற்­பா­டுகள் கார­ண­மாக அச்­ச­ம­டைந்­துள்ள முஸ்­லிம்­க­ளுக்கு இம்­முறை நிம்­ம­தி­யான முறையில் நோன்பை நோற்க முடி­யா­துள்­ளது. எனவே இம்­முறை முஸ்­லிம்­க­ளுக்கு ரமழான் இல்லை.

இப்­பி­ர­தே­சங்­க­ளுக்கு தாக்­குதல் நடத்­து­வ­தற்கு முன்னர் பொது­பல சேனா­வினர் ஸ்ரீகோத்தா மீது தாக்­குதல் நடத்­தி­யி­ருந்­தனர். அதற்கு நாம் தகுந்த பாடம் புகட்­டி­யி­ருந்தோம். இந்த விவ­கா­ரத்­திலும் நாம் அவர்­க­ளுக்கும் தாக்­கு­தல்­களின் பின்னால் இருப்­ப­வர்­க­ளுக்கும் பாடம்­பு­கட்­ட­வுள்ளோம்.

அளுத்­கம, தர்கா நகர், பேரு­வளை உள்­ளிட்ட பிர­தே­சங்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­க­ளா­னது பொரு­ளா­தா­ரத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது. தயா கம­கேயின் சீனி­தொ­ழிற்­சா­லையில் கைவைத்த இவர்கள் தெற்கு பகு­தியில் உள்ள வர்த்­த­கத்­தையும் பொரு­ளா­தா­ரத்­தையும் முற்­றாக நாச­மாக்­கி­விட்­டனர்.

அத்­தோடு பேரு­வளை, பெந்­தோட்டை உள்­ளிட்ட சுற்­றுலா மையங்­க­ளுக்கு  வெளி­நாட்டு பய­ணி­களின் வரு­கை­யிலும் பாதிப்­புகள் ஏற்­படும் அபாயம் இருக்­கின்­றது.

இவ்­வா­றான தாக்­கு­தல்கள் கார­ண­மாக சர்­வ­தேச மட்­டத்தில் சிங்­க­ள­வர்கள் மிரு­கத்­த­ன­மாக நடந்­து­கொள்ளும் மிலேச்­சத்­த­ன­மா­ன­வர்கள் என்று கூறும் அள­வுக்கு நிலை­மைகள் உரு­வா­கி­யுள்­ளன.

பேரு­வ­ளையில் இதற்கு முன்­னரும் முஸ்லிம் சிங்­க­ள­வர்­க­ளுக்­கி­டையில் முறுகல் நிலை தேன்­றி­யி­ருக்­கின்­றது. இதன்­போது பேச்­சு­வார்த்தை மூலம்­இந்தப் பிரச்­சி­னைகள் சு­மு­க­மாக தீர்க்­கப்­பட்­டுள்­ளன. எனவே அண்­மையில் பிக்கு மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­பட்­ட­போது உரிய முறையில் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்தால் பிரச்­சினை முற்­றி­யி­ருக்­காது. அரசு அதனை மேற்­கொள்ளத் தவ­றி­ய­மை­யி­னா­லேயே இன­வா­திகள் வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்து விட்­டனர். இதனால் நாட்­டுக்கே பாதிப்பும் அப­கீர்த்­தியும் ஏற்­பட்­டுள்­ளது.

2006 ஆம் ஆண்டு இப்­பி­ர­தே­சத்தில் ஏற்­பட்ட வன்­முறை கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இது­வ­ரையில் எவ்­வி­த­மான நஷ்­ட­ஈடும் வழங்­கப்­ப­ட­வில்லை. இம்முறையாவது மக்களுக்கான நஷ்டஈட்டை சரியான முறையில் அரசாங்கம் வழங்கவேண்டும் என்றார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham