சாரதியின்றி சுயமாக இயங்கும் கார்
Thursday, May 29, 20140 comments
கூகுள் இணையத்தள நிறுவனமானது தனக்கென சொந்தமாக சாரதியின்றி சுயமாக இயங்கக்கூடிய கார்களை வடிவமைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
இந்தக் கார் கட்டுப்பாட்டுக் கருவிகளோ, காரை இயக்குவதற்கான ஸ்ரியறிங் சக்கரங்களோ, மிதி உபகரணங்களோ இல்லாது வெறும் பொத்தான்கள் மூலமே கட்டுப்படுத்தக்கூடியதாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கார் தொடர்பில் கூகுள் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் ஸொகேயி பிறின் அறிவிப்புச் செய்தார்.
மக்களின் வாழ்க்கை முறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் சுயமாக செலுத்தப்படும் வாகனங்களுக்கான தொழில் நுட்பத்தை மக்கள் அங்கீகரிக்கச் செய்யவுமே இந்தக் காரை உருவாக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளதாக அவர் கூறினார்.
பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக மணிக்கு 25 மைல் வேகத்தில் பயணிக்கும் இந்தக் காரில் இருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment