விமலை சந்தித்த ஜனாதிபதிக்கு முஸ்லிம் எம்.பி.க்களை சந்திக்க நேரமில்லையா? - முஜிபுர் ரஹ்மான்

Thursday, May 29, 20140 comments


ஜனா­தி­பதி சீனா­வி­லி­ருந்து நாடு திரும்­பி­யதும் முஸ்லிம் எம்­பி­களை சந்­திக்­க­வி­ருப்­ப­தாக கூறப்­பட்ட போதிலும் அவர் இவர்­களை சந்­திக்­காது அவ­ச­ர­மாக அமைச்சர் விமல் வீர­வன்­ச­வையே  சந்­தித்தார். முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை சந்­திப்­ப­தற்கு ஜனா­தி­ப­திக்கு நேரம் ஒதுக்க முடி­ய­வில்­லையா? அல்­லது முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் கவனம் செலுத்த ஜனா­தி­ப­திக்கு விருப்­ப­மில்­லையா என மேல்­மா­காண சபை ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்­பினார்.

கடந்த திங்­கட்­கி­ழமை ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­ய­க­மான ஸ்ரீ கொத்­தாவில் இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் இவ்­வாறு கேள்வி எழுப்­பினர்.

இதே­வேளை, ஊழல் மோச­டி­மிக்க காங்­கிரஸ் ஆட்சி கவிழ்க்­கப்­பட்­டுள்ள நிலையில் இந்­தி­யாவை தாக்­கிய அர­சியல் சூறா­வளி இலங்­கையை தாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை எனவும் அவர் எச்­ச­ரிக்கை விடுத்தார்.
 ஜனா­தி­பதி மஹிந்த இந்­தி­யாவின் பிர­த­ம­ராக பத­வி­யேற்­க­வுள்ள நரேந்­திர மோடியை விடவும் அமைச்­ச­ரான விமல் வீர­வன்­ஸ­விற்கே அதிகம் பயந்து நடுங்­கு­கிறார். முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைக்கு நேரம் ஒதுக்­காத ராஜ­பக்ஷ அமைச்சர் விம­லுடன் உட­னடி­யாக பேச்­சு­வார்த்தை நடத்த நேரம் ஒதுக்­கு­கின்­ற­மை­யி­லி­ருந்தே அவ­ரு­டைய பயம் வெளி உல­குக்கு காட்­டப்­ப­டு­கி­றது என்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்;

பாரா­ளு­மன்­றத்தில் இரண்டு ஆச­னங்­களை தன்­வசம் வைத்து கொண்­டுள்ள விமல் வீர­வன்­ஸ­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்தும் ஜனா­தி­பதி, முஸ்­லிம்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் தொடர்பில் முஸ்லிம் எம்.பி.க்கள் பேச்­சு­வார்த்­தைக்கு அழைத்து கடிதம் எழுதி 3 வாரங்கள் கழிந்­து­விட்ட நிலை­யிலும் இது­வ­ரையில் ஜனா­தி­பதி எவ்­வித பேச்­சு­வார்த்­தைக்கும் அழைப்பு விடுக்­க­வில்லை.
அவர்கள் இந்­நாட்டின் சிறு­பான்­மை­யின மக்கள் தொடர்­பிலும் அவர்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் தொடர்பில் எவ்­வா­றான நிலைப்­பாட்டை வைத்­துள்ளார் என்­பது தெளி­வா­கி­றது.

  அரசின் பங்­கா­ளி­க­ளான அமைச்சர் விமல் வீர­வன்ஸ, சம்­பிக்க ரண­வக்க உள்­ளிட்டோர் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக செயற்­பட்டு வரு­கின்­றனர். அதே­போன்று நாட்டில் போராட்­டங்­களும் குறைந்­த­பா­டில்லை. எனவே ராஜ­பக்ஷ குடும்ப ஆட்சி முடி­வுக்கு கொண்டு வரப்­ப­ட­வுள்­ளது.

அண்­மையில் பஹ்­ரை­னுக்கு விஜ­ய­மொன்றை மேற்­கொள்­வ­தற்கு முன்னர் மத விவ­கா­ரங்­களை கையாள்­வ­தற்­கான பொலிஸ் பிரி­வொன்றை ஆரம்­பித்­து­விட்டுச் சென்றார். அது அரபு நாடு­களை ஏமாற்­று­வ­தற்­கா­கத்தான். அது போன்று வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு இந்தியாவுக்கு அழைத்துக்கொண்டுபோய், 'நாட்டில் 13 முழுமையாக அமுல்படுத்திவிட்டோம்'  'பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டோம்' என அந்நாட்டையும் ஏமாற்ற நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை என்றார்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham