ஆடைகளின்றி இரத்த வெள்ளத்தில் 80 வயது மூதாட்டியின் சடலம் -அக்குறணையில் சம்பவம்

Friday, May 23, 20140 comments



நாட்டில் அமை­தியும் சமா­தா­னமும் சுபீட்­சமும் ஏற்­பட்­டுள்­ள­தாக பலர் வாய்­கி­ழியக் கூக்­குரல் இட்­டாலும் 80 வய­தையும் தாண்­டிய ஒரு மூதாட்­டிக்கு தனி­மையில் வாழ முடி­யாது என்­ப­தையே அண்­மையில் அள­வத்­துக்­கொடை ரம்­புக்­எல்ல பிர­தே­சத்தில் கொலை­யுண்ட மூதாட்டி தொடர்­பான சம்­பவம் எடுத்துக் காட்­டு­கி­றது. இது தொடர்­பாக பகி­ரங்கத் தீர்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

எமக்குத் தெரிந்த காலத்தில் இப்­ப­டி­யான ஒரு அலங்­கோ­ல­மான அவ­லட்­ச­ன­மான செய்­தியை கேள்­விப்­பட்­டி­ருக்க முடி­யாது. யுத்­த­கா­லத்தில் நடந்­தவை பிரத்­தி­யேக மானவை. ஆனால் அமை­தியும் சுதந்­தி­ரமும் கொண்ட ஒரு இடத்தில் இப்­ப­டி­யான ஒரு விடயம் அதுவும் ஒரு முதாட்­டி­வி­ட­யத்தில் கொலை­கா­ரர்கள் நடந்து கொண்­டுள்­ளதை வெளிப் படுத்தும் தட­யங்கள் சொல்லும் கதை கவலை அளிக்­கி­றது.

அல­வத்­து­கொடை பொலிஸ் பிரி­வி­லுள்ள ரம்­புக்-­எல பள்­ளி­வாசல் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தனி­மை­யாக வசித்து வந்த சுமார் 80 வயது மதிக்கத் தக்க மூதாட்­டியின் ஜனாஸா (2014 05 10) இரவு நேரம் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டது.
சனிக் கிழமை காலை முதல் இவர் வழக்கம் போல் வெளியே நட­மா­டாத கார­ணத்தால் மாலையில் அய­ல­வர்கள் அவரைத் தேடி உள்­ளனர். வீட்டுக் கதவு பூட்­டப்­பட்­டி­ருந்­ததால் கூறை வழி­யாக பார்த்த போது இவர் இரத்த வெள்­ளத்தில் மர­ணித்­தி­ருப்­பது தெரிய வந்­துள்­ளது. பின்னர் பொலிஸா­ருக்கு அறி­வித்த பின் விசாரணைகள் ஆரம்பமாகின.

கண்டி பதில் நீதவான் மஹிந்த லிய­னகே  (11.5.2014) மரண விசா­ர­ணையை நடாத்­தி­ய­துடன் பிரேத பரி­சோ­த­னைக்கும் உத்­த­ர­விட்டார்.

கண்டி வைத்­திய சாலையில்  பிரேத பரி­சோ­தனை நடாத்­தப்­பட்டு பகி­ரங்கத் தீர்ப்பு வழங்­கப்­பட்ட வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

பத்­தி­ரிகைச் செய்­தி­யா­னது 'தனி­மையில் வசித்து வந்த முஸ்லிம் மூதாட்டி ஒருவர் ஆடைகள் கலை­யப்­பட்ட நிலையில் இரத்­த­வெள்­ளத்தில் பிண­மாக மீட்­கப்­பட்­டுள்ளார்' என்று இருந்­தாலும் அதன் உட்­க­ருத்­துக்­கள் பல­கோ­ணத்தில் ஆரா­யப்­பட வேண்­டி­யவை. ஏனெனில் அப்­பெண்ணின் பின்­ன­ணியை சற்­று­பார்ப்போம்.

அய­ல­வர்கள் தெரி­வித்த கருத்தின் படி ரம்­புக்­எல என்­பது அள­வத்­துக்­கொடை பொலிஸ் பிர­தே­சத்தில் அங்­கும்­புற வீதியில் அமைந்­துள்ள ஒரு சிறிய முஸ்லிம் கிராமம். பிர­தான பாதையில் இருந்து சற்று தொலைவில் தெரிந்­தாலும் ஒரு மலைக்­குன்றில் கீழ் இறங்கி சிற்­றோ­டையைக் கடந்து மீண்டும் குத்­தான ஒரு மலைக்­குன்றில் ஏறினால் றம்­புக்­எல முஸ்லிம் வித்­தி­யா­லமும் அதனை அடுத்து பள்­ளி­வா­சலும்வரும். பள்ளி வாசலைத் தாண்டிச் சென்றால் முஸ்லிம் கிரா­மத்தின் ஏனைய வீடு­களை சந்­தி­க்­கலாம். சுருங்கக் கூறின் ஒரு புற­மாக வந்தால் எல்லைப் பகு­தி­யா­கவும்  மறு­பு­ற­மாக வந்தால் நடுக்­கி­ர­ம­மா­கவும் சம்­பவ இடம் அமைந்­துள்­ளது.

எனவே கொலை­யா­ளிகள் அனே­க­மாக எல்லைப் புற­மா­கவே  பிவே­சித்­தி­ருக்க முடியும். கொலை செய்யப்பட்டுள்ள ்பெண் சுமார் 40 அல்­லது 50 வரு­ட­மாக இக்­கி­ரா­மத்தில் வசிக்கும் சித்தி சாதுனா என்­ப­வ­ராவார். இவ­ரது பூர்­வீகம் தெரி­யாது. ஏனெனில் இவ­ரது குடும்­பத்­தார்கள் மாத்­தளைப் பகு­தியில் உள்­ள­னர். அவர்கள் ஒரு விபத்தில் மர­ணித்­ததை அடுத்து இவர் மட்டும் இப்­ப­கு­திக்கு வந்து தனி­மை­யா­கவே வாழ்ந்து வந்­துள்ளார்.

இவ­ருக்கு தேவை­யான சகல உத­வி­க­ளையும் விருந்­தோம்பும் பண்பு கொண்ட ரம்­புக்­எல மக்கள் வழங்­கி­யுள்­ளனர். பள்­ளி­வா­சலின் உத­வி­யுடன் பள்ளி வீதியில் வீடு ஒன்­றையும் அமைத்துக் கொடுத்­துள்­ளனர். அவ­ருக்குத் தேவை­யான சகல உத­வி­க­ளையும் செய்து கொடுத்து வந்­துள்­ளனர்.

திரு­மணம் முடிக்­காத இவ­ரிடம் அதி­க­ளவு சேமிப்­புக்கள் இருக்­கலாம் எனக் கொலை­யாளி யூகித்­தி­ருக்­கலாம்.அவர் கொலை செய்­யப்­பட்­டி­ருந்த சமயம் ஆடைகள் அகற்­றப்­பட்­டி­ருந்­தன. இது விட­ய­மாக புலன் விசா­ர­ணைகள் மூலமே தெளிவு பெற­மு­டியும். தலையை பொல்லால் அடித்துக் கொலை செய்த கொலை­காரன் ஏன் உடை­களை அகற்ற வேண்டும் என்­பது சிந்­திக்க வேண்­டிய விடயம். அல்­லது வேத­னையால் ஆடைகள் கழன்­ற­னவா? என்றும் தெரி­யாது.

சில வேளை இவ­ரிடம் பணம் இருக்கு மென்று நினைத்து கொலையைச் செய்­தி­ருக்க முடியும். சிலவேளை  பாலியல் வல்­லு­ற­வுக்கு உற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளரா? அப்­ப­டி­யாயின் அது கொலைக்கு முன்பா? கொலைக்குப் பின்பா? என்­பது சிந்­திக்க வேண்­டி­யது.

ஆனால் மாஜிஸ்­திரேட் விசா­ரணை முடிவில் பகி­ரங்கத் தீர்­ப­ளிக்­க­பட்டுள்ளது. எனவே பொலிசாரின் மேல­திக விசா­ர­ணை­களின் அடிப்­ப­டை­யி­லேதான் அவற்றை அறிய முடியும்.

அத்­துடன் இக்­கொலை நடந்த இடத்­திற்கு மோப்ப நாய்கள் கொண்­டு­வ­ரப்­பட்­டன. அவை பள்ளி ஹவுல் அடி­வரை சென்று திரும்பி விட்­டது. அப்­ப­டி­யானால் கொலை­காரன் பள்ளி ஹவுல்­வரை ஏன் சென்றான் என்­பது ஒரு கேள்வி. இதற்கு இரண்டு விட­யங்­களை அனு­மா­னிக்­கலாம். சில­வேளை கைகால்­களைக் கழு­வி­விட்டுச் சென்­றி­ருக்­கலாம். அப்­ப­டி­யாயின் அவன் பள்ளி பற்றி தெரிந்­தவன். அதுவும் அவ்­வாறே என்றால் ஒன்று அவன் அய­ல­வ­னாக இருக்க வேண்டும் அல்­லது முஸ்லிம்கள் பற்றி தெரிந்த ஒரு­வ­னாக இருக்க வேண்டும்.

இந்நிலையில் கொலை­யா­ளியை கைது செய்­வ­தற்கு விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக அல­வத்­து­கொடை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி நிஷாந்த ஹெட்டியாரச்சி தெரிவித்தார். -ஜே.எம். ஹாபீஸ்

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham